செவ்வாய், அக்டோபர் 25, 2011

.

ஏகஇறைவனின் திருப்பெயரால்....

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.



சுகாதார உணவுடன் புழல் (சிறையில்) பங்களா வாழ்க்கை !

கோவை மோன்ராஜூ க்கு கொடுத்த என்கவுண்டருடன் குழந்தைகள் கடத்தல் முடிவுக்கு வந்துவிடும் என்று பெற்றோர்கள் எதிர்பார்த்திருந்தனர், அதை இன்னும் உறுதி படுத்திக்கொள்வதற்காக அதற்கடுத்து சென்னை மாணவன் கீர்த்திவாசன் கடத்தலில் விஜய், பிரபுவுக்கு வழங்கப்படும் தீர்ப்புடன் அப்பாடா என்ற நிம்மதிப் பெருமூச்சு விடலாம் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு கடத்தப்பட்ட சிறுவன் கீர்த்தி வாசனின் தந்தை செலுத்தும் வரிப்பணத்தில் கீர்த்தி வாசனைக் கடத்தியவர்களுக்கு ஒரு வருடம் சுகாதார உணவும், புழல் பங்களாவில் பாதுகாப்பு வாழ்க்கையும். என்றத் தீர்ப்பைக் கேட்டு பெற்றோர்கள் ஏமாற்றத்தையே அடைந்துள்ளனர். 
 
குழந்தைகளை கடத்தி வைத்துக் கொண்டு கொலை செய்து விடாமல், பாலியல் பாலாத்காரம் செய்து விடாமல் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு மிரட்டிப் பணம் பறிக்கலாம் மீறிப் பிடிபட்டால் புழல் பங்களாவில் பாதுகாப்பாக சொகுசு வாழ்க்கை வாழலாம் என்ற நிலைக்கு குழந்தை கடத்தல் சமாச்சாரம் இந்த தீர்ப்பால் மீண்டும் முருங்கை மரம் ஏறி விடுவதற்கே அதிக வாய்ப்பு இருக்கிறது.   

இந்த குழந்தை கடத்தல் கேடிகள் ஒரு வருடம் ஜாமீனில் வெளியில் வர முடியாது என்பதைத் தவிற வேறு எந்த பாதிப்பும் இவர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ ஏற்படாது. 
காரணம் உறக்கமும், உணவும் போக வெளியில் கிடைக்கும் அனைத்தும் புழல் சிறையிலும் கிடைக்கும். அவைகளை வெளியிலிருந்து யாரும் சிரமப்பட்டு உள்ளேக் கொண்டு வரவேண்டிய அவசியமில்லாத அளவுக்கு சிறை வார்டர்களே பெரும் தொகைக்கு சப்ளை செய்து வந்ததை பலமுறை புழல்சிறை வார்டர்கள் பிடிபட்டது நினைவிருக்கலாம்.

சோலார் முறையில் இயங்கக் கூடிய செல்போன் வெளி மார்கெட்டில் வருவதற்கு முன் புழல் சிறைக்குள் வந்து அதில் மிகவும் லாவகமாக பெரிய இடத்து கைதி ஒருவன் பேசிக் கொண்டிருந்ததைக் கண்ட போலீஸார் அதிர்ச்சி அடைந்ததாக படித்திருக்கிறோம்.

சிறை கைதிகளில் பைசா பார்ட்டிகள் பலர் புழல் சிறைக்குல் சொகுசு வாழ்க்கை நடத்துகின்றார்கள் என்பது நாம் எழுதி தெரிய வெண்டிய செய்தியல்ல நாடறிந்த செய்தியாகும்.

சிறுவன் கீர்த்தி வாசனை கடத்தி வைத்துக்கொண்டு மூன்று கோடி ரூபாய் பேரம் பேசியது என்பது சாதாரண விஷயமா ? அது சாதாரணத் தொகையா ? வசதி இருப்பவர்களிடம் தான் இவ்வாறு பணம் பறிக்கும் சதி திட்டம் நடக்கிறது என்றாலும் இந்த மோசடியில் ஈடுபட்ட இவர்கள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களா ? படிக்காமல் ப்ளாட் பாரங்களில் பெறுக்கிக் கொண்டுத் திரிந்தப் போக்கிரிகளா ? வசதியான குடும்பத்தில் பிறந்து, தரமான கல்விப் பயின்று, லண்டன் சிங்கப்பூர் போன்ற மேலைநாடுகளுக்கு சென்று வேலைப் பார்த்து கை நிறைய சம்பாதித்தவர்கள்.

கைநிறைய கிடைத்தாலும் மடி நிறைவதற்குத் தாமதமாகிறது என்றுக் கருதி குறுகிய காலத்தில் குபேரர்களாகி விடுவதற்காக கீர்த்தி வாசனைக் கடத்தி பேரம் பேசும் ஈனச் செயலில் ஈடுபட்டதாக அவர்களே ஒத்துக் கொண்ட பொழுது இவர்களுக்கு இந்த தண்டனை போதுமா ? இது தண்டனையா

படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கும் பட்டதாரிகள் இவர்களைப் போலவே ஈனச்செயல்களில் ஈடுபடத் துணிந்தால் இளைஞர்களின் எதிர் காலம் என்னவாகும்

இவர்களுக்கும் என்கவுண்டர் தான் சரி என்று நாம் சொல்ல வரவில்லை, ஆனாலும் உயிருக்கு விலை வைத்தவர்களுக்கு, தரமான கல்விக்கு இழுக்கு ஏற்படுத்தியவர்களுக்கு, பட்டதாரிகளுக்கு தலைகுணிவை ஏற்படுத்திய இவர்களுக்கு ஆயுள் தண்டனை, இரட்டை ஆயுள் தண்டனை எல்லாம் எங்கே சென்றது என்பது தான் நமது கேள்வி ?

முஸ்கின், ரித்தீக் படுகொலையை கண்டித்து கோவை மாநரமே திரண்டதால் தான் மோகன் ராஜ் என்கவுண்டரும்;, அதைத் தொடர்ந்து இவர்களுக்கு ஒரு வருடம் குண்டர் சட்டமும் வந்தது. இல்லை என்றால் மோகன் ராஜூம் இதுவரை ஜாமீனில் வந்திருப்பான் இவர்களும் வந்திருப்பார்கள்.  

இதே தாடி வைத்த ஒரு முஸ்லீம் சந்தேக கேஸில் மாட்டினால் கூட அவரை மாஜிஸ்திரேட்டிடம் கொண்டுப் போய் நிருத்துவதற்கு முன் அநியாயமாக பாதி உயிரை எடுத்து விடுகிறார்கள், அவரையும், அவரது பெற்றோரையும், அவர் சார்ந்த மார்க்கத்தையும் அந்த எஸ்.ஐ ஏக போக வசனத்தில் திட்ட வில்லை என்றால் அன்று அவருக்கு உறக்கம் மட்டுமல்ல மல,ஜலமேப் போகாது. 

இந்த நாட்டில் என்று மலருமோ ஜனநாயகம் ?



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

வியாழன், அக்டோபர் 20, 2011

.

அல்லாஹ்வின் திருப்பெயரால்

وَقَالَ الَّذِينَ كَفَرُوا رَبَّنَا أَرِنَا الَّذَيْنِ أَضَلَّانَا مِنَ الْجِنِّ وَالْإِنسِ نَجْعَلْهُمَا تَحْتَ أَقْدَامِنَا لِيَكُونَا مِنَ الْأَسْفَلِينَ


காளி பெயரில் அருள்வாக்கு சொல்லி நடந்த படுபாதக சம்பவம் நகைக்கடை அதிபர் கடத்தி கொலை: ரூ.3 கோடி கொள்ளை விஷம் கொடுத்து கொன்ற பூசாரி கைது. தினத்தந்தி 17-1-2007

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....  

வாழைப்பழம் ஒன்றை இரண்டு பக்கமும் அழகாக சீவி அதற்குள் சயனைடு விஷத்தை கலந்து வாழைப்பழத்தின் வெளியில் விபூதியைத் தடவி அதை பிரசாதம் என்று சொல்லி சரேஷ் போராவுக்கு காளி கோயில் பூசாரி வசந்த எனபவர்  கொடுத்துள்ளார்.

ஏமாற்றி படுகொலை செய்யப்பட்ட கோடீஸ்வரர் சுரேஷ் போரா நகை கடை, மற்றும் ரியல் எஸ்டேட் நடத்தி வந்திருக்கிறார் தான் செய்துவந்த தொழிலில் தொழில் ரீதியாக தான் சந்தித்த தொழிலதிபர்கன், வியாபாரிகளால் அல்லது தனது நிருவனத்தின் பணியாளர்களால் ஏமாறவில்லை.

திறமையாக தொழில் செய்துள்ளார் அதனால் இவ்வளவு பெரிய கோடீஸ்வரராக முடிந்தது. தனது தொழிலில் ஏமாறாதவர் தான் தேர்ந்தெடுத்துக் கொண்ட கடவுள் கொள்கையால் ஏமாந்து விட்டார். கண் மூடித்தனமாக பக்தி எனும் பெயரில் பூசாரியிடம் சோரம் போய் விட்டார்.


அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள். அல்குர்ஆன் 25:73.


மேற்கானும் திருமறை வசனம் ஏகஇறைவன் அல்லாஹ்விடமிருந்து மனித சமுதாயத்திற்கு இறக்கியருளப்பட்டது முஸ்லீம்களுக்கு மட்டுமல்லாது உலக மக்கள் அனைவருக்கும் அருளப்பட்டதாகும். 

வேதம் கூறுகிறது என்று எவர் எதைச் சொன்னாலும் அதை அப்படியே நம்பாமல் சிந்திக்கச் சொல்கிறது திருமறைக்குர்ஆன் 

திருமறைக் குர்ஆனில் கூறப்படுகினற ஆறாயிரத்துக்கும் அதிகமான வசனங்கள் அனைத்தும் ஒவ்வொன்றும் சிந்தனை ஆற்றலை வளர்க்கக் கூடியதாகும். எந்த ஒரு வசனமும் வீனான செய்திகளைப் பேசவில்லை கடந்து சென்ற சமுதாயத்தவர்களுடைய நிகழ்வுகளைக் கூறினாலும் அதிலும் பினவரும் வழித் தோன்றல்களுக்கு படிப்பனைகள் இருக்கும்.


திருமறைக் குர்ஆனை ஆய்வு செய்ய முற்பட்ட மாற்று மதத்தவர்களில் ஏராளமானோர்  இஸ்லாத்தை ஏற்றுள்ளனர் திருமறைக் குர்ஆனை ஆய்வு செய்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட மக்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.


உலக பொதுமறை திருமறைக்குர்ஆனை படித்திருந்தால் தொழில் அதிபர் சுரேஷ் போரா காளி கோயில் பூசாரியிடம் ஏமாந்து கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார். 

ஊடகங்கள் எல்லாம் வசந்த் பூசாரியை விமர்சித்து பூசாரி ஏமாற்றி விட்டதாக எழுதுகிறார்கள் இவ்வாறு ஒவ்வொரு முறையும் பிரேமனந்தாவில் தொடங்கி சங்கராச்சாரியர், சபரிமலை தலைமை தந்திரியிலிருந்து இன்றைய வசந்த் வரை பட்டியல் நீளுகிறது இவர்கள் ஏமாற்றுவதற்கு எது காரணமாக அமைந்தது மூலதனம் எது ? என்று இவர்களுக்கு தெரியும்! ஆனாலும் அவற்றிலிருந்து இவர்கள் மீளுவதற்கு முயற்சிப்பதில்லை. 

ஒவ்வொரு காலகட்டத்திலும் அப்பாவிகள் பக்தி எனும் பெயரால் ஏமாற்றப்படும் பொழுதும், சுரண்டப்படும் பொழுதும், உலகம் எள்ளி நகையாடும் பொழுததெல்லாம் மேல்படி கடவுட் கொள்கையை அறிமுகப்படுத்தியவர்கள் மதகுருமார்கள் மீதும், பூசாரிகள் மீதும் பலியைப்போட்டு ஒதுங்கி விடுவார்கள்.


இப்பொழுதும் வசந்தை போலிப்பூசாரி என்று எழுதிவிட்டு காளியின் பெயரால் சொல்லப்படுகின்ற அருள் வாக்கு சரிதான் என்று வாதிட எழுதுகின்றனர்.

வசந்த் சுரேஷ் போராவிடம் குறி சொல்லும்போது உங்களிடம் ஏராளமான கருப்புப் பணம் உள்ளது. நகைகளும் உள்ளன. எனவே  வருமானவரி அதிகாரிகள் வந்து சோதனையிட்டு அள்ளிச் செல்ல இருக்கிறார்கள் என்று காளி சொல்கிறாள். உங்களிடம் உள்ள பணம், நகைகளை காளி கோயிலுக்கு எடுத்து வாருங்கள் அவற்றை பூஜையில் வைத்து எடுத்து தந்து விடுவேன் என்று கூறியுள்ளார். 

சந்துக்கு சந்து, வீதிக்கு வீதி காளி கோயில் இருக்கவேச் செய்கின்றன எந்த இடத்தில் கோயிலை எழுப்பினாலும் அந்த இடத்திற்கு தெய்வம் வந்து விடும்  என்பது அவர்களது மதநம்பிக்கை இதுவல்லாமல் அவரவர் வீட்டிலும் ஒரு பூஜை அறை இருக்கும். கொலை செய்யப்பட்ட கோடீஸ்வரர் போரா தனது வீட்டிற்குள் இருக்கும் பூஜையறைக்கு பூசாரி வசந்தை வரவழைத்து தனது கருப்பு பணத்தின் மீதும், நகைகளின் மீதும் பூஜை செய்ய சொல்லி இருக்கலாம் ? அல்லது அவரது வீட்டின் அருகிலுள்ள கோயிலுக்கு வரச் சொல்லி இருக்கலாம் குருட்டுத் தனமான பக்தி வசந்துடைய இடத்திற்கு இவரை பணத்துடனும், நகைகளுடனும் இவரது கால்களை இழுத்துச் சென்று விட்டது.    

  • தேசத் துரோகத்திற்கு தெய்வம் துணை நிற்குமா ? என்றெல்லாம் சிந்திக்க முடியாத அளவுக்கு அவருடைய பொது அறிவை வேலை செய்ய விடாமல் தடுத்தது எது

  • தமிழகத்தில் ஒரு கோயில் விடாமல் சுற்றித்திரிந்து செய்த பூஜைகள் அவரை காப்பாற்றாமல் விட்டது ஏன்

  • திருவக்கரை வக்கிரக காளியம்மன் தனது தீவிர பக்தரை கை விட்டது ஏன் ?

சுரேஷ் பாராவின் பிணம் பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது பிணம் கிடந்த காரை செம்பியம் போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். சுரேஷ் போராவின் மனைவி மஞ்சுளா குழந்தைகளுடன் வந்து கணவரின் உடலைப் பார்த்து கதறி அழுதார்.

அன்பு சகோதரி மஞ்சுளா அவர்களே !
  • உலக பொதுமறை குர்ஆனை எந்த மதத்தைச் சார்ந்தவர் படித்தாலும் அவரகள் மதகுருமார்களிடம் ஏமாற மாட்டார்கள்.

  • உலகப்பொதுமறை குர்ஆனைப் படித்து தெளிவடையுங்கள் உங்களை வழி கெடுக்கும் கூட்டத்தார்கள் யார்
  • உங்களை  எளிதில் வழி கெடுக்க காரணமாக இருந்த கடவுட் கொள்கையும், அதன் வழிபாட்டு முறையும் எது ?
  • உங்களுடைய மதத்தின் அடித்தளம் எப்படிப் பட்டது ?

என்பதையும் உங்கள் கணவரை இழந்தப் பின்னராவது நீங்கள் தெளிவடைந்து கொள்ளுங்கள். நீஙகளெல்லாம் நியாய தீர்ப்பு நாளன்று அல்லாஹ்விடம் கீழ்கானுமாறு முறையிடுவீர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்  

எங்கள் இறைவா! ஜின்களிலும், மனிதர்களிலும் எங்களை வழி கெடுத்தோரை எங்களுக்குக் காட்டு! அவர்கள் இழிந்தோராகிட அவர்களை எங்களின் பாதங்களின் கீழே ஆக்குகிறோம் என்று (ஏக இறைவனை) மறுத்தோர் கூறுவார்கள். 41:29

நீங்கள் வாழும் இந்த உலகத்திலேயே அவர்கள் யார் என்பதை நீங்கள் தெரிந்து கொண்டதனால் அவர்களை இவ்வுலகிலேயே உங்களது காலுக்கு கீழாக ஆக்க வேண்டுமெனில் உலக பொதுமறை திருக்குர்ஆனை படித்து சத்தியத்தை ஏற்றுக் கொண்டால் அவர்களும் அவர்கள் அறிமுகப் படுத்திய போலி கடவுள் கொள்கையும் தாமாக உங்களது காலுக்குக் கீழாகவிடும்.  



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்