அல்லாஹ்வின் திருப்பெயரால்…
وَقَالَ الَّذِينَ كَفَرُوا رَبَّنَا أَرِنَا الَّذَيْنِ أَضَلَّانَا مِنَ الْجِنِّ وَالْإِنسِ نَجْعَلْهُمَا تَحْتَ أَقْدَامِنَا لِيَكُونَا مِنَ الْأَسْفَلِينَ
காளி பெயரில் அருள்வாக்கு சொல்லி நடந்த படுபாதக சம்பவம் நகைக்கடை அதிபர் கடத்தி கொலை: ரூ.3 கோடி கொள்ளை விஷம் கொடுத்து கொன்ற பூசாரி கைது. தினத்தந்தி 17-1-2007
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
வாழைப்பழம் ஒன்றை இரண்டு பக்கமும் அழகாக சீவி அதற்குள் சயனைடு விஷத்தை கலந்து வாழைப்பழத்தின் வெளியில் விபூதியைத் தடவி அதை பிரசாதம் என்று சொல்லி சரேஷ் போராவுக்கு காளி கோயில் பூசாரி வசந்த எனபவர் கொடுத்துள்ளார்.
ஏமாற்றி படுகொலை செய்யப்பட்ட கோடீஸ்வரர் சுரேஷ் போரா நகை கடை, மற்றும் ரியல் எஸ்டேட் நடத்தி வந்திருக்கிறார் தான் செய்துவந்த தொழிலில் தொழில் ரீதியாக தான் சந்தித்த தொழிலதிபர்கன், வியாபாரிகளால் அல்லது தனது நிருவனத்தின் பணியாளர்களால் ஏமாறவில்லை.
திறமையாக தொழில் செய்துள்ளார் அதனால் இவ்வளவு பெரிய கோடீஸ்வரராக முடிந்தது. தனது தொழிலில் ஏமாறாதவர் தான் தேர்ந்தெடுத்துக் கொண்ட கடவுள் கொள்கையால் ஏமாந்து விட்டார். கண் மூடித்தனமாக பக்தி எனும் பெயரில் பூசாரியிடம் சோரம் போய் விட்டார்.
அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள். அல்குர்ஆன் 25:73.
மேற்கானும் திருமறை வசனம் ஏகஇறைவன் அல்லாஹ்விடமிருந்து மனித சமுதாயத்திற்கு இறக்கியருளப்பட்டது முஸ்லீம்களுக்கு மட்டுமல்லாது உலக மக்கள் அனைவருக்கும் அருளப்பட்டதாகும்.
வேதம் கூறுகிறது என்று எவர் எதைச் சொன்னாலும் அதை அப்படியே நம்பாமல் சிந்திக்கச் சொல்கிறது திருமறைக்குர்ஆன்
திருமறைக் குர்ஆனில் கூறப்படுகினற ஆறாயிரத்துக்கும் அதிகமான வசனங்கள் அனைத்தும் ஒவ்வொன்றும் சிந்தனை ஆற்றலை வளர்க்கக் கூடியதாகும். எந்த ஒரு வசனமும் வீனான செய்திகளைப் பேசவில்லை கடந்து சென்ற சமுதாயத்தவர்களுடைய நிகழ்வுகளைக் கூறினாலும் அதிலும் பினவரும் வழித் தோன்றல்களுக்கு படிப்பனைகள் இருக்கும்.
திருமறைக் குர்ஆனை ஆய்வு செய்ய முற்பட்ட மாற்று மதத்தவர்களில் ஏராளமானோர் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர் திருமறைக் குர்ஆனை ஆய்வு செய்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட மக்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
உலக பொதுமறை திருமறைக்குர்ஆனை படித்திருந்தால் தொழில் அதிபர் சுரேஷ் போரா காளி கோயில் பூசாரியிடம் ஏமாந்து கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்.
ஊடகங்கள் எல்லாம் வசந்த் பூசாரியை விமர்சித்து பூசாரி ஏமாற்றி விட்டதாக எழுதுகிறார்கள் இவ்வாறு ஒவ்வொரு முறையும் பிரேமனந்தாவில் தொடங்கி சங்கராச்சாரியர், சபரிமலை தலைமை தந்திரியிலிருந்து இன்றைய வசந்த் வரை பட்டியல் நீளுகிறது இவர்கள் ஏமாற்றுவதற்கு எது காரணமாக அமைந்தது மூலதனம் எது ? என்று இவர்களுக்கு தெரியும்! ஆனாலும் அவற்றிலிருந்து இவர்கள் மீளுவதற்கு முயற்சிப்பதில்லை.
ஒவ்வொரு காலகட்டத்திலும் அப்பாவிகள் பக்தி எனும் பெயரால் ஏமாற்றப்படும் பொழுதும், சுரண்டப்படும் பொழுதும், உலகம் எள்ளி நகையாடும் பொழுததெல்லாம் மேல்படி கடவுட் கொள்கையை அறிமுகப்படுத்தியவர்கள் மதகுருமார்கள் மீதும், பூசாரிகள் மீதும் பலியைப்போட்டு ஒதுங்கி விடுவார்கள்.
இப்பொழுதும் வசந்தை போலிப்பூசாரி என்று எழுதிவிட்டு காளியின் பெயரால் சொல்லப்படுகின்ற அருள் வாக்கு சரிதான் என்று வாதிட எழுதுகின்றனர்.
வசந்த் சுரேஷ் போராவிடம் குறி சொல்லும்போது உங்களிடம் ஏராளமான கருப்புப் பணம் உள்ளது. நகைகளும் உள்ளன. எனவே வருமானவரி அதிகாரிகள் வந்து சோதனையிட்டு அள்ளிச் செல்ல இருக்கிறார்கள் என்று காளி சொல்கிறாள். உங்களிடம் உள்ள பணம், நகைகளை காளி கோயிலுக்கு எடுத்து வாருங்கள் அவற்றை பூஜையில் வைத்து எடுத்து தந்து விடுவேன் என்று கூறியுள்ளார்.
சந்துக்கு சந்து, வீதிக்கு வீதி காளி கோயில் இருக்கவேச் செய்கின்றன எந்த இடத்தில் கோயிலை எழுப்பினாலும் அந்த இடத்திற்கு தெய்வம் வந்து விடும் என்பது அவர்களது மதநம்பிக்கை இதுவல்லாமல் அவரவர் வீட்டிலும் ஒரு பூஜை அறை இருக்கும். கொலை செய்யப்பட்ட கோடீஸ்வரர் போரா தனது வீட்டிற்குள் இருக்கும் பூஜையறைக்கு பூசாரி வசந்தை வரவழைத்து தனது கருப்பு பணத்தின் மீதும், நகைகளின் மீதும் பூஜை செய்ய சொல்லி இருக்கலாம் ? அல்லது அவரது வீட்டின் அருகிலுள்ள கோயிலுக்கு வரச் சொல்லி இருக்கலாம் குருட்டுத் தனமான பக்தி வசந்துடைய இடத்திற்கு இவரை பணத்துடனும், நகைகளுடனும் இவரது கால்களை இழுத்துச் சென்று விட்டது.
- தேசத் துரோகத்திற்கு தெய்வம் துணை நிற்குமா ? என்றெல்லாம் சிந்திக்க முடியாத அளவுக்கு அவருடைய பொது அறிவை வேலை செய்ய விடாமல் தடுத்தது எது ?
- தமிழகத்தில் ஒரு கோயில் விடாமல் சுற்றித்திரிந்து செய்த பூஜைகள் அவரை காப்பாற்றாமல் விட்டது ஏன் ?
- திருவக்கரை வக்கிரக காளியம்மன் தனது தீவிர பக்தரை கை விட்டது ஏன் ?
சுரேஷ் பாராவின் பிணம் பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது பிணம் கிடந்த காரை செம்பியம் போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். சுரேஷ் போராவின் மனைவி மஞ்சுளா குழந்தைகளுடன் வந்து கணவரின் உடலைப் பார்த்து கதறி அழுதார்.
அன்பு சகோதரி மஞ்சுளா அவர்களே !
- உலக பொதுமறை குர்ஆனை எந்த மதத்தைச் சார்ந்தவர் படித்தாலும் அவரகள் மதகுருமார்களிடம் ஏமாற மாட்டார்கள்.
- உலகப்பொதுமறை குர்ஆனைப் படித்து தெளிவடையுங்கள் உங்களை வழி கெடுக்கும் கூட்டத்தார்கள் யார் ?
- உங்களை எளிதில் வழி கெடுக்க காரணமாக இருந்த கடவுட் கொள்கையும், அதன் வழிபாட்டு முறையும் எது ?
- உங்களுடைய மதத்தின் அடித்தளம் எப்படிப் பட்டது ?
என்பதையும் உங்கள் கணவரை இழந்தப் பின்னராவது நீங்கள் தெளிவடைந்து கொள்ளுங்கள். நீஙகளெல்லாம் நியாய தீர்ப்பு நாளன்று அல்லாஹ்விடம் கீழ்கானுமாறு முறையிடுவீர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்
எங்கள் இறைவா! ஜின்களிலும், மனிதர்களிலும் எங்களை வழி கெடுத்தோரை எங்களுக்குக் காட்டு! அவர்கள் இழிந்தோராகிட அவர்களை எங்களின் பாதங்களின் கீழே ஆக்குகிறோம் என்று (ஏக இறைவனை) மறுத்தோர் கூறுவார்கள். 41:29
நீங்கள் வாழும் இந்த உலகத்திலேயே அவர்கள் யார் என்பதை நீங்கள் தெரிந்து கொண்டதனால் அவர்களை இவ்வுலகிலேயே உங்களது காலுக்கு கீழாக ஆக்க வேண்டுமெனில் உலக பொதுமறை திருக்குர்ஆனை படித்து சத்தியத்தை ஏற்றுக் கொண்டால் அவர்களும் அவர்கள் அறிமுகப் படுத்திய போலி கடவுள் கொள்கையும் தாமாக உங்களது காலுக்குக் கீழாகவிடும்.
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்